சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன் தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே