சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும் தெய்வம்ஒன் றேஎனும் திறமும் நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும் நன்மையும் நரைதிரை முதலாம் துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச் சுகவடி வம்பெறும் பேறும் தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ தந்தருள் தருணம்ஈ தெனக்கே