Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3018
சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்

சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே

மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்

ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்

கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.