சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப் போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய் யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே