Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1493
சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிதனை 
ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் 

உவகை ஓங்கப் பார்த்தனன்காண் 
வாரார் முலைகண் மலைகளென 

வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் 
ஏரார் குழலாய் என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே
பாடல் எண் :3236
சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே

தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே

கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்

இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்

பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே()   

 இஃதோர் தனிப்பாடல் இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொவே பதிப்பித்துள்ளார்

திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------

 ஆளுடைய அரசுகள் அருண்மாலை 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.