சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப் பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே எந்தாய்நின் உள்ளமறி யேன்