Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2614
சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்

தூயனை யாவரும் சொல்லரி யானைப்
பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்

பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை

வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை

இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.