Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :894
சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
பூத நாதர்நற் பூரணா னந்தர்
தாமும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.