செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம் அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெய்ந் நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே