Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5597
செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் 

திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை 
மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் 

மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் 
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் 

மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் 
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே 

புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.