செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே