செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்தநாள் அன்றி அறிவதில் லாத சிறுபரு வத்தும் அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல் எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந் ததுவே பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவ தென்னே