செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும் தேவரும் முனிவரும் பிறரும் இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம் எந்தைநின் திருவருள் திறத்தை எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன் என்தரத் தியலுவ தேயோ ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர் உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே