Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3190
சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி

சிவகாம வல்லியொடு சிவபோக வடிவாய்
மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்

விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்

பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த

வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.