சேவார் கொடியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர் பூவார் கொன்றைப் புயங்கள்மனம் புணரப் புணர வரும்பவனி ஓவாக் களிப்போ டகங்குளிர உடலங் குளிரக் கண்டலது பாவார் குதலைப் பெண்ணேநான் பரிந்து நீரும் பருகேனே