சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம் வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள் எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும் செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே திருச்சிற்றம்பலம் எண்ணப் பத்து அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்