சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய் வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம் புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய் மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே