சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார் மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன் கல்லும் மரமும் ஆனந்தக் கண்ணீர் கொண்டு கண்டதெனில் எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே