பாடல் எண் :3385
ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
ஐயர்திரு உளம்எதுவோ யாதுமறிந் திலனே
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
பிள்ளைச் சிறு விண்ணப்பம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.