Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1086
தத்து மத்திடைத் தயிரென வினையால் 

தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே 
செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே 

துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன் 
புத்தை நீக்கிய ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.