Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4204
தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும் 

தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார் 
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள் 

இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே 
ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே 

ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது 
சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும் 

சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.