Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4135
தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத் 

தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே 
பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே 

பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே 
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால் 

இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே 
கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில் 

கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.