தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன் இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில் சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ