தனித்துணை எனும்என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை தனிலே இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே என்னிரு கண்ணுள்மா மணியே அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே அண்ணலே இனிப்பிரி வாற்றேன் கனித்துணை தருதற் கிதுதகு தருணம் கலந்தருள் கலந்தருள் எனையே