Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5809
தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில் 

தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன் 
கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன் 

கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச் 
செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த 

சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன் 
இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால் 

இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.