Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5745
தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே 

தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர் 
பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம் 

புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி 
என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம் 

இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான் 
முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும் 

முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.