தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்தம ணாளர் ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின் உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன் அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல் இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா