Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4163
தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் 

சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி 
நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி 

நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே 
உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில் 

ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே 
மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில் 

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.