தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண் தனிமுதல் பேரருட் சோதிப் பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய் பராபர நிராமய நிமல உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர் உளத்ததி சயித்திட எனக்கே வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை மாகடற் கெல்லைகண் டிலனே