Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4720
தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும் 

தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன் 
கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே 

கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர் 
வருணப் பொதுவிலும் மாசமு கத்தென் 

வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன் 
இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர் 

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.