தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும் தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன் கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர் வருணப் பொதுவிலும் மாசமு கத்தென் வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன் இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே