Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3046
தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்

தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி

இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்

பெற்றிஅளித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்

உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.