தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால் தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப் பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும் பெற்றிஅளித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும் உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே