தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங் கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே