தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான் ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய் இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய் அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே