Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3952
தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத் 

தானேதா னானானைத் தமிய னேனைக் 
குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக் 

குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி 
அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை 

அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால் 
இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.