தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத் தானேதா னானானைத் தமிய னேனைக் குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக் குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால் இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே