தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத் தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன் பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன் பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன் அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால் ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன் நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே