Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3300
தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்

தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்

பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்

ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.