தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச் சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில் இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும் எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான் தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே