Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4179
தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச் 

சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை 
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில் 

இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும் 
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா 

தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான் 
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே 

சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.