தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான் ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர் செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன் எய்தற் கரியசுகம் ஏய்ந்து