தாய ராதியர் சலிப்புறு கிற்பார் தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார் நேய ராதியர் நேயம்விட் டகல்வார் நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன் தீய ராதியில் தீயன்என் றெனைநின் திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால் ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான் என்செய் கேன்நர கிடைஇடும் போதே