Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3383
தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்

சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ

கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ

பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை

மறந்திடுமோ திருஉளத்தின் வண்ணம்அறிந் திலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.