தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப் பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே