திகைப்பார் திகைக்க நான்சிறிதும் திகையேன் எனநின் திருவடிக்கே வகைப்பா மாலை சூட்டுகின்றேன் மற்றொன் றறியேன் சிறியேற்குத் தகைப்பா ரிடைஇத் தருணத்தே தாராய் எனிலோ பிறரெல்லாம் நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் திருத்தல் அழகோ நாயகனே