Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3811
திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம் 

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே 
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே 

உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே 
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய் 

அப்பாலும் ஆய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே 
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா 

வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.