திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும் ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே