Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3760
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே 

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ 
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும் 

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ 
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே 

கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ 
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.