திருவில் தோன்றும் மகளேநீ
செய்த தவந்தான் யார்அறிவார்
மருவில் தோன்றும் கொன்றையந்தார்
மார்பர் ஒற்றி மாநகரார்
கருவில் தோன்றும் எங்கள்உயிர்
காக்க நினைத்த கருணையினார்
குருவிற் றோன்றும் தியாகர்தமைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.