Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3223
திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்

தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்

பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்

உண்மையறி வானந்த உருவுடைய குருவே
சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்

திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.