துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்ணீற் றழகர்அவர் கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன் கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே