துணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண் கணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின் இணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே பணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே