Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3473
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் 

தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் 

கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி 

வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் 

எந்தைநின் திருவுளம் அறியும்   
  திருவருள் - முதற் பதிப்பு, பொ சு பதிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.