துனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும் பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன் இனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய் கனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே