Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3078
துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே

சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்

பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே

உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
பெரியபொரு ளெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே

பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.