துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய் அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் என்பேன் அந்தோ